அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பிச்சை எடுக்க தடை
Saturday, January 26, 2013 - 14:45
அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுகின்ற இடையூறுகளை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். பல்வேறு தரப்பினர் பஸ்களில் பயணிகளிடம் பணம் அறவிடுகின்றமை பஸ்களில் பிரசாரங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைளுக்கும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தடை விதிக்கவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
Saturday, January 26, 2013 - 14:45
அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுகின்ற இடையூறுகளை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். பல்வேறு தரப்பினர் பஸ்களில் பயணிகளிடம் பணம் அறவிடுகின்றமை பஸ்களில் பிரசாரங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைளுக்கும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தடை விதிக்கவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.