கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

CAPTAIN News



பத்திரிகையாளரை நாய் என்று திட்டிய விஜயகாந்த்! (வீடியோ இணைப்பு) சென்னையில் பத்திரிகையாளர்களை நாய் என்று தரக்குறைவாக பேசியதாக தே.மு.தி.க,தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்‌‌.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் உட்பட நான்கு பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இது குறித்து கேள்விகேட்ட பத்தரிகையாளர்கள் மீது ஆவேசமடைந்த தே.மு.தி.க., தலைவர் பத்திரிகையாளர்களிடம் திட்டியதுடன் தரக்குறைவாக நடந்துக் கொண்டுள்ளார். மேலும் அவருடன் இருந்த ஒரு எம்.எல்.ஏ.,க்கள் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விஜயகாந்த் மீதும் அவருடன் இருந்த எம்.எல்.ஏ.,மீதும் பத்திரிக்கையாளர்கள் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.