கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மர முந்திரிகை செய்கையில் ஆர்வம் காட்டும் யாழ் விவசாயிகள்

யாழ் மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.


உரும்பிராய் பிரதேசத்தில் அதிகளவான விவசாயிகள் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதிகளவு இலாபத்தை ஈட்டி தரும் முந்திரிகை செய்கை  யாழ் மாவட்டத்தில் 56 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்துக்கும் தென்பகுதிக்கும் இடையிலான ஏ ஒன்பது வீதி திறக்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.