பம்பலப்பிட்டி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
Friday , 01 June 2012
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு 11.30 அளவில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் சில வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவ்விடத்திலிருந்து இன்று பகல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
Friday , 01 June 2012
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு 11.30 அளவில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் சில வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவ்விடத்திலிருந்து இன்று பகல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.