வவுனியா மாணவன் யாழில் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்
Sunday , 03 June 2012
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாககத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நேற்று நீராடிக் கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 15 வயதான யோகேஸ்வரன் சிறிதரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.