கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

திங்கள், 9 ஜனவரி, 2012

Shakthi tv News


உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறக்கம்
Monday , 09 January 2012
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏ 380 ரக விமாமொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு குறித்த விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஏ 380 ரக விமானமொன்று இலங்கையில் தரையிறக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் கூறினார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் எரிப்பொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.